கேரள வாடல் நோயால் மாவட்டத்தில்,தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென்னைகளை அழித்து விட்டு மாற்று விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
- கேரள வாடல் நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது.
- தென்னையில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால் இலைகள் மஞ்சள் நிறமாகி படிப்படியாக தென்னை மரம் பட்டுப்போகும். இதற்கு விவசாயத்துறையினர் பரிந்துரை செய்த மருந்துகளால் பலன் இல்லை.
- சுமார் பத்தாயிரம் ஏக்கரில் தென்னைகள் அழிக்கப்பட்டு மாற்று விவசாயத்தை விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர்.
- கடந்த சில மாதங்களில் மட்டும், கூடலூர் பகுதிகளில் இந்நோய் தாக்கத்தால் ஏராளமான தென்னைகள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.இவற்றால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர். தென்னைகளை வெட்டி அழித்து அங்கு வாழை, நெல் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
இந்த வாடல் நோயை பற்றிய இன்னொரு செய்தியை இங்கே படிக்கலாம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்