கூடுதல் லாபம் பெறுவதற்காக விவசாயிகள் மத்தியில் ஊடுபயிர் திட்டத்தை சேலம் வேளாண்மை துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வகையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத்தில் செம்மை நெல் பயிரிட்ட விவசாயிகளிடம், வயலின் வரப்பில் உளுந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்று வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
- நெல் நாற்று நடவு செய்யும் நேரத்தில் வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய வேண்டும்.
- நெல்லுக்கு செல்லும் நீர் உளுந்து செடிகளுக்கும் கிடைக்கும்.
- இதனால் உளுந்து செடிகளும் செழிப்பாக வளரும்.
- ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள வரப்பில் உளுந்து சாகுபடி செய்தால் 75 கிலோ உளுந்து கிடைக்கும்.
- தற்போது ஒரு கிலோ உளுந்து 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
- வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு நான்காயிரம் ரூபாய் வரை கூடுதலாக லாபம் கிடைக்கும்’ என்கின்றனர் அதிகாரிகள்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்