திருநெல்வேலி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களில் குருத்துப் பூச்சியின் தாக்குதல் ஆங்காங்கே பரவலாகக் காணப்படுகிறது. இந்தக் குருத்துப் பூச்சியானது தண்டு துளைப்பான் எனவும் அழைக்கப்படுகிறது.
இப் பூச்சியின் புழுக்கள் தூர்களில் சிறு துவாரம் ஏற்படுத்தி தண்டுக்குள் சென்று தண்டுப்பகுதியை உணவாக உள்கொள்கிறது.
தாக்குதல் அறிகுறிகள்:
- கதிர் வரும் தருணத்தில் வெண் கதிர் காணப்படும்.
- சாதாரண நெல்மணிகள் நிறம் இல்லாமல், மணிகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். பூச்சித் தாக்கிய மணிகள் காய்ந்து விடும்.
- இளம் பயிராக இருந்தால் பயிர் தூர்கட்டும் பருவத்தில் நடுக் கருத்து காய்ந்து காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தழைச்சத்து உரங்களை மொத்தமாக இடமால் பிரித்து இட வேண்டும்.
- தழைச்சத்துடன் வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டியது அவசியம்.
- இனக் கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற வீதத்தில் வைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அளிக்கலாம்.
- தாக்குதல் பொருளாதார சேத நிலையாகிய வெண்கதிர் 2 சதவீதத்துக்கு அதிகமாகவோ அல்லது சாய்ந்த நடுக்குருத்து 10 சதவீதத்துக்கு அதிகமாகவோ இருந்தால் பூச்சி மருந்துகளை தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
- குளோர் ஆன்ட்ரனிலிபுரோல் 18.5 சதவீதம் 60 மி.லி. என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.
- கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 5 சதவீதம், எஸ்பி 400 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.
- பாஸ்பமிடான் 40 சதவீதம், எஸ்எல் 500 மிலி என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். இல்லையெனில் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 4 சதவீத குருணையை ஏக்கருக்கு 8 கிலோ என்ற அளவில் இட்டுக் கட்டுப்படுத்தலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்