நெல் நாற்றில் வெளிர் தன்மை

தற்போது தொடர்ந்து பெய்து வரும் தொடர்மழையால்,  நெற்பயிரில் தண்ணீர் தேங்குவதால், நாற்றில் நுண் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

இத்தன்மையால், நாற்றில் வெளிர்தன்மை இருந்தால், இப்பயிர்களுக்கு நுண் ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஈடு செய்யும் பொருட்டு, ஒரு ஏக்கருக்கு, 22 கிலோ யூரியா, சிப்சம், 18 கிலோ, இவற்றுடன், நான்கு கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
பின், வயலில் தண்ணீர் வடிந்தவுடன், வயலில் உரமிடும் முறை மூலம், உரமிட வேண்டும். ஒரு வாரம் முதல், பத்து நாட்களில், இப்பயிர் வெளிர் தன்மையில் இருந்து விடுபட்டு, நுண் ஊட்டச்சத்துடன் நன்கு வளரும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *