பருவமழை பாதித்த நெல் வயல்களில் உர மேலாண்மை

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் உர மேலாண்மையை விவசாயிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குநர் இல. பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது பெய்த மழையினால் செங்கோட்டை, வள்ளியூர், களக்காடு வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்களில் ஒரு சில இடங்களில் நீர்த் தேங்கி நிற்கிறது.
  • நெல் வயல்களில் நீர்த் தேங்கி நிற்பதால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதுடன் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உருவாகும்
    ஆகவே, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் தேங்கியுள்ள நீரினை உடனடியாக வடித்திட வேண்டும்.
  • மழையினால் ஏற்பட்ட ஊட்டச்சத்து இழப்பினை சரிசெய்யும் வகையில் 26 கிலோ யூரியாவுடன், 21 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து மேலுரமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு இட வேண்டும்.
  • மேலும், ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ சிங்க் சல்பேட்டை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும்.
  • மழையினால் நெல் பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று பயிர்ப் பாதுகாப்பு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பருவமழை பாதித்த நெல் வயல்களில் உர மேலாண்மை

  1. ஜெயக்குமார் says:

    இரசாயன உரங்களை தவிர்த்து
    இயற்கை உரங்களை பரிசீலித்திருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *