சம்பா பருவத்தில் நெல் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைத்தால், அதிக விளைச்சல் பெறலாம் என மோகனூர் வேளாண் உதவி இயக்குநர் தங்கராஜூ தெரிவித்துள்ளார்.
- நாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சாண கொல்லியை கலந்து, விதை நேர்த்தி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான குலை நோய், இலைக் கருகல் ஆகியவற்றை தடுக்கலாம்.
- ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன், 400 கிராம் அசோஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போ பாக்டீரியா (400 கிராம்) உயிர் உரத்தை விதையுடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
- அசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சி பயிருக்கு அளிக்கும்.
- அதே சமயம், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிடைக்காத மணிச்சத்தை கரைத்து நெல் பயிருக்கு வழங்குகிறது.
- இதனால் உரச்செலவு குறைவதுடன் அதிக விளைச்சலும் கிடைக்கும்.
விரிவாக்க மையத்தில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ள உயிர் உரங்களை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்