நெற்பயிரில் புகையான் பூச்சி கட்டுப்படுத்தும் முறை

நெற்பயிரில் புகையான் தாக்குதல் மற்றும் பாக்டீரியா இலக்கருகல் நோயை கட்டுப்பத்தும் வழிமுறைகள்:

புகையான் பூச்சி:

  • தற்போது நிலவும் காலநிலை காரணமாக குறுவை சாகுபடியில் புகையான் பூச்சிகளின் தாக்குதல் மற்றும் இலைக்கருகல் நோய் பரவலாக தென்படுகிறது. புகையான் பூச்சிகளின் தாக்குதல் அறிகுறிகளை தெரிந்துகொண்டு அவற்றை கட்டுப்படுத்தவேண்டும்.
  • புகையான் பூச்சிகள் நெற்பயிரின் அடிப்பாகத்தில் நீர்ப்பரப்பின் மேல் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இளம்பயிர்கள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும்.
  • கதிர் வந்த நிலையில் தாக்குதல் ஏற்பட்டால் மணிகள் பால் பிடிக்காமல் பதராகிவிடும்.
  • இதனால் பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்படும். தாக்குதல் அதிகரிக்கும்போது ஆங்காங்கே வட்டமாக பயிர் புகைந்து திட்டு திட்டாக காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தாக்குதலை தவிர்க்க, 8 அடிக்கு ஒரு பட்டம் வீதம் பயிரை பிரித்துவிடவேண்டும்.
  • வயலில் தொடர்ந்து நீர் தேங்குவதை தவிர்த்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சவேண்டும்.
  • புகையான் பூச்சியின் தாக்குதல் தென்பட்டவுடன் வயலில் உள்ள நீரை வடித்துவிடவேண்டும்.
  • பின்னர் பயிர்களின் தூர்பாகத்தில் சூரிய ஒளி படுமாறு பட்டம் பிரித்துவிட்டு, அதிகம் தழைச்சத்து இடுவதை தவிர்த்து தேவைப்படும்போது மட்டும் தழைச்சத்தி இடவேண்டும்.
  • அதேபோல் விளக்குபொறி இடுவதை தவிர்த்து தேவைப்படும்போது மட்டும் தழைச்சத்து இடவேண்டும்.
  • விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் புகையான் பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
  • புகையான் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் செயற்கை பைரித்ராய்டு, மௌர்ந்தகளான அசிபெட், கார்போபியூரான், பென்தியான், மீதைல்பாரத்தியான், போரேட், பாசலோன், பாஸ்போமிடான், குயினால்பாஸ் ஆகிய மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
  • விவசாயிகள் மேற்கண்ட முறைகளை கடைபிடித்து நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.

தகவல்: வேளாண்மை உதவியக்குநர், திருவையாறு.

நன்றி: M.S. சுவாமிநாதன் நிறுவனம் 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *