தீவனப் பயிர்களில் விதை உற்பத்தி மற்றும் விதைச்சான்று பெறும் வழிமுறைகள் குறித்த இலவச பயிற்சி நாமக்கலில் 2013 நவம்பர் 7-ம் தேதி அளிக்கப்பட உள்ளது.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் அன்று காலை 9 மணிக்கு நடக்க உள்ள இந்த பயிற்சி முகாமில், கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்ற தீவனப்பயிர்கள், மண்ணின் தன்மைக்கேற்ற தீவனப்பயிர்கள், விதை உற்பத்தியில் புதிய ரகங்கள், விதை நேர்த்தி செய்யும் முறைகள், விதை அளவு, பயிர் இடைவெளி, பயிர் விலகு தூரம், விதைப்பு செய்தல், உரமிடுதல், நவீன நீர்ப்பாசன முறைகள், விதை அறுவடை செய்யும் முறைகள், விதை சுத்திகரிப்பு மற்றும் விதை சான்று பெறும் முறைகள், மரவகை தீவனப்பயிர்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 6-ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்திட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04286266345, 04286266244, 04286266650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்