நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய ஆட்சியரகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2015 ஜூலை 9-ம் தேதி காலை 9 மணிக்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த ஒருநாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04362204009, 09842455833 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்’ என தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் என். புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *