நிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா, கீரை சாகுபடி செய்வது குறித்து, நாமக்கல்லில் 2013 ஏப்ரல் 9-ஆம் தேதி விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை சாகுபடி செய்வது குறித்த ஒருநாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2013 ஏப்ரல் 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் நிழல் வலைகளில் காய்கறிகள், கீரை வளர்ப்பதன் முக்கியத்துவம், அமைக்கும் முறைகள், சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், கீரை வகைகள், நாற்றுகள் உற்பத்தி, பசுமைக் குடில்களில் வளர் மேடை அமைக்கும் முறை, நீர்ப்பாசன முறை, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, அடியுரம், நீர்வழி உரமளித்தல், நிலப் போர்வை அமைத்தல், வடிவமைப்பு மற்றும் அறுவடை குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது 04286266345, 04286266244, 04286266650 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு வரும் 2013 ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்