மரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 அக்டோபர் 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, ‘மரவள்ளி சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

மரவள்ளியில் உள்ள உயர் ரகங்கள், நடும் பருவம், நடவு முறைகள், விரைவு பயிர் பெருக்கமுறை, நடவுக்கு ஏற்ற குச்சிகள் மற்றும் கரணை தேர்வு குறித்து விளக்கப்படுகிறது.

சொட்டு நீர்பாசனம், உரம் மற்றும் களை நிர்வாகம், ஊட்டச்சத்து குறைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், பூச்சி நோய் நிர்வாகம் குறித்த தொழில் நுட்பங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும், வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது, 04286266345 , 04286266650 என்ற எண்ணிலோ, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *