பருத்தியில் இலை கருகல் நோய்

பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மழைக்குப்பின் பருத்தியில் பூச்சி நோய் தாக்குதல் பற்றி வயல் ஆய்வு செய்யப்பட்டது.

  • தற்சமயம் பருத்தி பயிர் காய்ப்பருவத்தில் உள்ளது. தண்ணீர் தேங்கிய மற்றும் ஈரம் அதிகமாக உள்ள வயல்களில் நுண்சத்து பற்றாக்குறை காணப்படுகிறது.
  • நுண்சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் சிவப்பு நிறமாகவும், செடிகள் பசுமை தன்மை இழுந்தும் காணப்படும்.
  • இதனைக்கட்டுப்படுத்துவதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 5 கிராம் சிங்சல்பேட் நுண்ணூட்ட உரத்தினை கலந்து தெளிக்க வேண்டும்.
  • தற்பொழுது காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் நுண்கிருமிகள் அதிகமாக உற்பத்தியாகி செடியில் நோயினை உண்டுபண்ணும்.
  • தற்சமயம் பருத்தி செடியில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் பரவலாக காணப்படுகிறது. இந்நோய் செடியின் இலைப்பகுதி, நரம்புபகுதி மற்றும் காய் என அனைத்து பகுதியிலும் காணப்படும்.
  • இந்நோயினால் தாக்கப்பட்ட இலைகளின் அடிப்பாகத்தில் பனித் திவலைகள் சூழ ஒழுங்கற்ற வடிவத்தில் கரும்புள்ளிகள் காணப்படும்.
  • இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை மஞ்சள் நிறமாகி காய்ந்துவிடும்.
  • இந்த நோயினை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஒரு கிலோவுடன் பாக்டீரிமைசின் 80 கிராமினை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு பெரம்பலூர் வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார்  தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *