புளியம் பழத்தை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் சேமிப்பது எப்படி

புளியம் பழத்தை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் சேமிப்பது எப்படி?”வி.எஸ்.ஆர். ரவிச்சந்திரன், சேந்தக்குடி.
இயற்கை விவசாயி, மாலதி பதில் சொல்கிறார்.

”கொட்டை நீக்கிய புளியை நன்றாக சூரிய ஒளியில் காய வைத்து, பிறகு மண் பானையில் சேமித்து வைத்தால்… இரண்டாண்டுகள் வரை சுவையும் நிறமும் மாறாமல் அப்படியே இருக்கும். மழைக் காலங்களில் பானையில் குளிர்ச்சித் தன்மை இருக்கும் என்பதால், புளி கெட்டுப் போகக்கூடும். எனவே, மழை நின்ற பிறகு பானை மற்றும் புளியை வெயிலில் காயவைத்து, மீண்டும் சேமிக்கலாம்.

கொட்டையை நீக்காமல் சேமித்தால், புழுக்கள் உருவாகி புளி கெட்டுப் போய்விடும். அதனால், கண்டிப்பாக கொட்டை நீக்கிய புளியைத்தான் சேமிக்கவேண்டும்.”

நன்றி:  பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *