கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில் இருக்கும் இந்தக் கிராமம் எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருக்கிறது. அந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, தெற்கு அய்யம்பாளையத்தில் மிகப்பெரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி ஜோராக நடக்கிறது.
இந்தக் கிராம மக்கள் மரம் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்திய காரணமாக இந்தக் கிராமம் கரூர் மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சிக்கான விருதை கடந்த ஆண்டு பெற்றது. அதனால், இந்த ஒன்றியம் முழுவதையும் பசுமையாக்க நினைத்த கரூர் மாவட்ட நிர்வாகம், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியை இந்தக் கிராம ஊராட்சியிடம் கொடுத்தது. அவர்களும் இயற்கையாக இந்த ஊர் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி இங்கே பல் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை பதியம் போட்டு உருவாக்கி பராமரித்து வருகிறார்கள். அவற்றை அவ்வப்போது கடவூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நட அனுப்பியும் வைக்கிறார்கள்.
நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாளர்களை வைத்து சிறப்பாக மரக்கன்றுகளை வளர்க்கிறார்கள். ஏற்கெனவே கரூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம். அதிலும் இந்த வருடம் கோடை தொடங்கியுள்ள நிலையில், கடந்த முப்பது வருடங்களில் அடிக்காத வெயில் அடித்து, கொளுத்தி எடுக்கிறது. ஆனால், இந்த வறட்சியிலும் மக்கள் அந்த மரக்கன்றுகளை பசுமையாக வளர்க்கிறார்கள்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்