மகாராஷ்ட்ராவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்

பருத்தி  சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்கொலைக்கு மரபணு மாற்ற பட்டபருத்தி (Bt Cotton) தான் காரணம் என்று மதிய விவசாய அமைச்சரவை ஒப்பு கொண்டு உள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் மட்டும் 2011 வருடம் 209 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மதிய அரசின் அறிக்கையில் “பருத்தி விவசாயிகள் மரபணு மாற்ற பட்ட பருத்திக்கு (Bt cotton) மாறிய பின் தற்கொலைகள் அதிகமாகி உள்ளன” என்கிறது.

பூச்சி மருந்து குறைவு, அதிக மகசூல், என்று பலவிதமான வாக்குறுதிகளுடன் வந்த Bt பருத்தி ஐந்து ஆண்டுகளிலேயே தன்னுடைய வெற்றியை இழந்து விட்டது.

முதல் ஐந்து ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரித்த சாகுபடி அதற்கு பின் அதிகரிக்க வில்லை.

ஆனால், பூச்சி தொல்லைகள் அதிகரித்தன.

இதனால், ஏற்கனவே அதிக விலை கொடுத்து வாங்கிய விதைகளுடன் அதிக விலை கொடுத்து ரசாயன பூச்சி மருந்துகள் வாங்கும் நிலைமைக்கு   விவசாயிகள் தள்ள பட்டனர். அதிக கடன் பளுவை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர் என்கிறது Hindustan Times பத்திரிக்கை.

மேலும் விவரங்களுக்கு: Hindustan Times


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மகாராஷ்ட்ராவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *