சீரகம் சாகுபடி

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
ரகங்கள்: கோ.1 மற்றும் கோ.2.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை: ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும். குளிர்ந்த தட்பவெப்பநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் வரை பயிர் செய்யலாம்.
பருவம்: மலைப்பகுதிகளுக்கு: மே – ஜூன்; சமவெளிப்பகுதிகளுக்கு: அக்டோபர்- நவம்பர் அதிக மழை பெய்யும் காலங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
விதையும் விதைப்பும்: நேரடி விதைப்பதற்கு எக்டருக்கு 9-12 கிலோ நாற்று விட்டு நடவு செய்ய 3-4 கிலோ, ஒரு எக்டர் நடவு செய்ய நாற்றங்காலுக்கு 100 சதுர மீட்டர் அளவுள்ள பரப்பு தேவை. தேவைக்கேற்ப மேடைப்பாத்திகள் அமைத்து, விதைகளை பாத்திகளின் மேல் சீராகத்தூவி, கைக்கொத்தியால் மண்ணுடன் நன்கு கலக்கச்செய்ய வேண்டும். விதைகள் முளைக்க 5 முதல் 9 நாட்கள் ஆகும்.
நடவு: 5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 து 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்,
நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் 3 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 10 டன்கள், 25 கிலோ தழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும்.
மேலுரம்: செடிகள் பூ விடும் தருணத்தில் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும்.
பயிர்- இடவேண்டிய சத்துக்கள் (கிலோ) – இப்கோ, டிஏபி, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)
சீரகம் – அடியுரம் – தழை25 – மணி10 – சாம்பல்0 – டிஏபி22 – யூரியா46
சீரகம் – மேலுரம் – தழை25 – மணி0 – சாம்பல்0 – டிஏபி0 – யூரியா55
களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி: களைகள் முளைக்கும் முன் எக்டருக்கு ஒரு லிட்டர் பெண்டிமித்திலின் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். பின் இரண்டு அல்லது மூன்று முறை கைக்களை எடுக்க வேண்டும். 3வது மாதத்தில் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: அசுவினிப்பூச்சி: இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30இசி 2மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்: நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் எக்டருக்கு 25 கிலோ தூவும் கந்தகம் மருந்தை உபயோகிக்க வேண்டும்.
அறுவடை: பயிர் 7-8 மாதத்திற்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். 10-15 நாட்கள் இடைவெளியில் காய்ந்த பூங்கொத்துகளை அறுவடை செய்ய வேண்டும். பின் இவற்றை வெயிலில் 4-5 நாட்கள் உலர்த்தி, பின் குச்சியில் தட்டி விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
மகசூல்: எக்டரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு.
அகமது கபீர், தாராபுரம், 08903757427.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *