செண்டு மல்லி சாகுபடி

நடப்பு பருவத்துக்கு ஏற்றபடி துல்லிய தொழில்நுட்ப சாகுபடித் திட்டம் மூலம் செண்டுமல்லியைப் பயிரிடலாம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். செண்டு மல்லி எல்லாக் காலத்திலும் மக்கள் விரும்பி வாங்கக் கூடியது. சுப, துக்க காரியங்கள் போன்றவற்றுக்கும் செண்டுமல்லியை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

 

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

மண் வகை:

  • செண்டுமல்லி அனைத்து வகையான மண்ணிலும், மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண்ணுக்கும் மிகவும் ஏற்றது.

பருவ காலம்:

  • செண்டு மல்லியை அக்டோபர் – ஜனவரி பருவத்திலும், பிப்ரவரி -மே மாதம் வரையிலும் பயிர் செய்யலாம்.

விதையளவு:

  • செண்டுமல்லி ஒரு ஹெக்டேருக்கு, குட்டை ரகத்துக்கு 75 ஆயிரம் விதைகளும், நெட்டை ரகத்துக்கு 55 ஆயிரம் விதைகளும் இட வேண்டும்.

நாற்றங்கால் பராமரிப்பு:

  • பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க் கழிவை வளர் தட்டுக்களில் நிரப்பி குழிக்கு ஒரு விதை வீதம் நிரப்பி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி பாலித்தீன் பேப்பர் மூலம் மூடி மூன்று நாள்கள் 50 சதவீத நிழல் உள்ள இடத்தில் அல்லது நிழல் வலையில் வைக்க வேண்டும். அப்போது முளைப்புத் திறன் அதிகரிக்கும்.
  • பின்னர் ஒரு நாளைக்கு இரு முறை பூ வாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 19:19:19 என்ற உரத்தை லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து 15 நாள்கள் தெளிக்க வேண்டும்.
  • நடவு முறை, இடைவெளி: 25 நாள்கள் வயதான செண்டுமல்லி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். குட்டை வீரிய ஒட்டு ரகத்தை 40 ல 30 சென்டி மீட்டர் அளவில் ஒரு ஹெக்டேருக்கு 74 ஆயிரம் செடிகளை நடலாம்.
  • நெட்டை வீரிய ஒட்டு ரகத்தை 60 ல 30 சென்டி மீட்டர் என்ற அளவில் 55 ஆயிரம் செடிகளை நடலாம்.
  • நீர்ப் பாசனம், நீர்வழி உரமிடுதல்: வீரிய ஒட்டு ரகத்துக்கு 90:90:75 வுடன் தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை பயிர் காலம் முழுவதும் நீர்ப் பாசனத்துடன் இட வேண்டும்.

களை எடுத்தல்:

  • நடவு செய்த 30, 60-ஆம் நாள்களில் களை எடுக்க வேண்டும்.

மண் அணைத்தல்:

  • களையெடுக்கும் சமயத்தில் மண் அணைத்தல் அவசியம். இது நன்கு வேர் பிடிக்கவும், செடியின் தாங்கு திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

அறுவடை:

  • மேற்கண்ட முறைகளை முறையாக கடைப்பிடித்தால் நடவு செய்த 60-ஆம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும். காலை நேரத்தில் பூக்களை செடியில் இருந்து பறித்து கூடை அல்லது சாக்குப் பையில் அடைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம் எனதோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செண்டு மல்லி எல்லா காலத்திலும் மக்கள் விரும்பி வாங்கக் கூடியது. சுப, துக்க காரியங்கள் போன்றவற்றுக்கும் செண்டுமல்லியை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “செண்டு மல்லி சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *