கேரளத்தில் உள்ள முதலமாடா மா தோட்டங்களுக்கு புகழ் பெற்றது. ஒரு காலத்தில் இங்கு அல்போன்சா, மல்கோவா, நீலம் , செந்தூரா போன்ற பல வகை ரகங்கள் பயிரிட பட்டன. காலபோக்கில், பூச்சிகளை அழிக்க மேலும் மேலும் சக்தி வாய்ந்த ரசாயன பூசிகொல்லிகளை பயன் படுத்த ஆரம்பித்தனர்.
முதலில் என்டோசல்பான் அதற்கு பின்பு Cymbush, Monocrosfate, Talstar, Malathion, Azoxistobin, Omethoate, Chlorpyrifos என்று மேலும் சக்தி வாய்ந்த ரசாயனங்கள்..
இப்போது அந்த இடமே, விஷம் படிந்த ஒரு மையம் என்று அறிவிக்க பட்டுள்ளது. (Declared as Toxic hub)
போன வருடம் அரேபியா நாட்டுகளுக்கு இந்த மாம்பழங்கள் அனுப்பியபோது அவை தடை செய்ய பட்டன. நம் நாட்டில் தான் எந்த சட்டத்தையும் யாரும் சட்டை செய்வது இல்லயே? இவை போறாது என்று இந்த பூச்சி கொல்லிகள் மரங்களின் மீது ஸ்ப்ரே செய்வதால் விவசாயிகளுக்கு எல்லாம் வியாதிகள் வர போவது நிச்சயம்
விவசாயிகள் மேலும் மேலும் சக்தி வாய்ந்த ரசாயன பூச்சி கொல்லிகளை விட்டு இயற்கை வழிகளை பயன் படுத்தினால் அவர்களின் உடல் நலமும் உயரும். மக்களுக்கும் நன்மை வரும்
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்