தேனி மாவட்டத்தில் விவசாயிகள் வாழையில் ஊடுபயிராக அவரை, வெங்காயம், செவ்வந்தி உட்பட குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம், சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி, வைகைபுதூர், ஜெயங்கலம், லட்சுமிபுரம், சருத்துபட்டி, வட புதுப்பட்டி, தேவதானப்பட்டி, கீழவடகரை உட்பட பல்வேறு கிராமங்களில் வாழை சாகுபடியின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாழை உயரமாக வளர்ந்து 4 மாதங்களுக்கு பிறகு சூரிய ஒளி நிலத்தில் படுவது தடுக்கப் படுகிறது.
இந்தக்கால கட்டத்தில் வாழைக்குள் தட்டை, அவரை, வெங்காயம், செவ்வந்திப் பூ உட்பட பல்வேறு குறுகிய காலப்பயிர்களை சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.
விவசாயிகள் கூறுகையில், “வாழை நடவு செய்து அறுவடைக்கு வருவதற்கு 10 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை ஆகிறது. இந்த இடைப்பட்ட காலங் களில் ஊடுபயிராக குறுகிய காலப்பயிர்கள் சாகுபடி செய்வதால் வருவாய் கிடைக்கிறது. இதனால் ஊடுபயிர் சாகு படியில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறோம்,’ என்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்