வெயில் காலத்தில் வாழையில் “பனாமா’ வாடல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
பெரியகுளம் மற்றும் ஒன்றியப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
- வெயில் காலங்களில் வாழையில் பனாமா வாடல் நோய் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
- அமிலத்தன்மை அதிகமாக உள்ள மண்ணில் இந்த பூஞ்சாணம் அதிகமாகக் காணப்படும்.
- இந்நோய் தாக்கப்பட்டால் முதலில் அடிப்பக்க இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காம்பிலிருந்து ஒடிந்து விடும்.
- இந்த பூஞ்சாணம் சைலம் திசுக்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சுகிறது.
- இதனால் வேரிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் நீர் மற்றும் சத்துக்கள் தடை செய்யப்பட்டு,வாழை வாடத் துவங்குகிறது.
- நோய் தாக்கிய வாழைக் கிழங்குகளை புதிய இடத்தில் நடுவதாலும், நோய் தாக்காத வாழையின் வேர்களை நோயுள்ள வாழையின் வேர்கள் தொடுவதாலும் இந்நோய் பரவுகிறது.
- நோய் தாக்கிய வாழையை கண்டறிந்து அதை வேருடன் பிடுங்கி எரித்து விட்டு அந்த குழிகளில் சுண்ணாம்பு இட வேண்டும்.
- மண்ணின் அமிலத்தன்மையை, சுண்ணாம்பு இட்டு சரி செய்வதன் மூலம் வாடல் நோய் வரமால் தடுக்கலாம்.
- வாழையின் உற்பத்தியை அதிகரிக்கலாம், என தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்