காட்டாகொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் ஊராட்சியில், விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள், காய்கறி பயிர்களுடன் தற்போது, குறைந்த செலவில் அதிக லாபம் தரும், வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயி மனோகரன் கூறியதாவது:
- எனக்கு சொந்தமான, 2.88 ஏக்கர் நிலத்தில், கற்பூர வாழை சாகுபடி செய்துள்ளேன்.
- இதற்காக, முதற்கட்டமாக, ஏக்கருக்கு, 5,000 ரூபாய் செலவில், தொழுஉரம் மற்றும் ரசாயன உரங்களை நிலத்தில் கொட்டி, நன்கு உழுது பக்குவபடுத்தினேன்.
- பின்னர், ஒரு வாழைக் கன்று, 15 ரூபாய் வீதம், 24 ஆயிரம் ரூபாய் செலவில், 1,600 வாழைக் கன்றுகளை வாங்கி நடவு செய்துள்ளேன்.
- இவைகள் தற்போது, சிறப்பாக வளர்ந்து வருகின்றன.
- 10 மாதங்கள் வரை, பக்கவாட்டில் வளரும் கன்றுகளின் இலைகளை அறுவடை செய்து, விற்பனை செய்யலாம்.
- மாதம் ஒருமுறை, களை எடுத்து, தேவையான நீர் பாசனம் அளிக்க வேண்டும்.
- களை மற்றும் உரச்செலவு என, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். வாழை மரங்கள், 12 மாதங்களுக்கு பிறகு, குலை தள்ளும்.
- ஒரு வாழை குலையில், 15 முதல் 17 சீப்புகள் வரை கிடைக்கும்.
- ஒரு வாழை குலை, 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகும்.
- அனைத்து செலவுகளும் போக, ஏக்கருக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
- நீர் பாசனத்திற்கு, சொட்டு நீர் பாசன கருவிகளை, மானிய விலையில் பெற்று, பொருத்தி உள்ளதால், குறைந்த நீர் பாசனம் மற்றும் குறைந்த செலவில், அதிக லாபம் பெற முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்