திரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்

பொதுவாக தூள் முறை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் ஆனது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இத்தகைய துகள் முறை மூன்று மாதங்கள் மட்டுமே பயன்படுத்துவது மட்டுமல்லாமல் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு குழாய்களில் அடைபட்டு பாசனத்திற்கு தடையாய் அமைகிறது.

இத்தகைய பிரச்னைகளுக்கு மாற்றாக திரவநிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திரவநிலையை நீண்டநாள் வைத்து பயன்படுத்தலாம்.மேலும் அதிக எண்ணிக்கை அளவில் இத்தகைய முறை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சொட்டுநீர்ப்பாசனத்தில் எளிய முறையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் மற்ற முறைகளைக் காட்டிலும் இத்தகைய திரவ நிலை சிறப்பாக செயல்படுகிறது.
விதை நேர்த்தி :

10மிலி திரவ நிலை சூடோமோனாஸை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அதனை ஒரு கிலோ விதையுடன் 10 நிமிடங்களுக்கு நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்று களைத்தல், மண் மூலம் நேர்த்தி செய்தல், சொட்டுநீர்ப்பாசன மூலம் பயன்படுத்துதல் போன்ற முறைகளை கையாண்டு, தானியப் பயிர்களில் வேர்களைத் தாக்கும் நோய்கள், எண்ணெய்வித்து, பயறு வகைப் பயிர்களில் வேரழுகல், வாடல்நோய்கள், தோட்டக்கலைப் பயிர்களின் நாற்றமுக, வாடல்நோய், வாழையில் வாடல்நோய் போன்ற எல்லா மண்வழிக் காரணிகளையும் கட்டுப்படுத்தும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *