பிசான பருவ நெல் விதை நேர்த்தி

மானூர் வட்டார பிசான பருவ நெல் சாகுபடியாளர்கள் மற்றும் புரட்டாசி பட்ட உளுந்து, பயறுவகை சாகுபடியாளர்கள் விதை நேர்த்தி செய்து விதைக்க வேளாண் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிசான பருவ நெல்லில் குலைநோய் உட்பட பல்வேறு வகையான நோய்கள் தாக்கி மகசூலை பெருமளவில் பாதிக்கின்றன.

இந்நோயினை பரப்பக்கூடிய நோய் காரணிகள் விதை மூலமாகவும், தண்ணீர், காற்று, மண் மூலமாகவும் செயல்படுவதால் வரும்முன் காக்கும் முறையினை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.

  • இதற்கு 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் என்ற மருந்தை கலந்து நன்கு விரவி 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்கவும், (அல்லது) சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் என்ற உயிர் பூசணக்கொல்லியை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற விகிதத்தில் ஈர விதை நேர்த்தியாக செய்து பின் விதைக்கவும்.
  • பயறுவகை பயிர்களுக்கு 1 கிலோ விதைக்கு 6 மில்லி இமிடாகுளோப்ரிட் என்ற மருந்து கலந்து பின் உகிராம் கார்பண்டிசிம் என்ற பூசணக் கொல்லியை சேர்த்து நன்கு விரவி உலர்த்தி பின் விதைக்கவும்.

இவ்வாறு விதை நேர்த்தி செய்து விதைப்பதால் பயிர்களை பின்பருவங்களில் தாக்கக்கூடிய நோய்களை கட்டுபடுத்தலாம்.இவ்வாறு மானூர் வேளாண்மை உதவி இயக்குநர் முருகேஸ் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *