கோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி

கோடைப்பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி சாகுபடி. இந்தப்பயிர் சிறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இவர்கள் சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர்தான் செய்ய இயலும்.

  • பிஞ்சு வெள்ளரி சாகுபடி என்பது வெள்ளரிக்காய் பிஞ்சாக இருக்கும்போதே அறுவடை செய்து விற்று பயன்பெறும் தொழிலாகும். இதன் வயது 90 நாட்கள்.
  • பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாகி அதிக விதைகளைக் கொண்டிருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது.
  • மிகச்சிறிய பிஞ்சுகள், நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச்சுவை கொண்டதாக இருக்கும். ஒரு விதைகூட காயில் இருக்காது.
  • இத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.8 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.15 வரை விற்கின்றனர்.
  • இரண்டாம் தரக் காய்கள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை கிலோ ரூ.10 வரை இருக்கும்.
  • பெரிய பிஞ்சுகள் 10-11 அங்குலம் இருக்கும். இதன் விலை கிலோ ரூ.5 வரை இருக்கும்.
  • முதல் இரண்டு தரம் கொண்ட காய்கள் சிரமம் இன்றி விற்பனையாகிவிடும். மூன்றாம் தரக்காயில் விற்பனை சில சமயம் பிரச்னையாக இருப்பதுண்டு
    சாகுபடி விவரங்கள்:
  • விவசாயிகள் தனது டீசல் ஆயில் இன்ஜின் செட்டினை உபயோகித்து பாசனம் செய்து வெள்ளரி சாகுபடி செய்கின்றனர். விவசாயி ஒரு ஏக்கரில் சாகுபடி செய்வார்.
  • இதற்குத்தேவையான விதையை தயார் செய்து கொள்கிறார்.
  • ஏக்கருக்கு 150 கிராம் விதையை உபயோகப்படுத்துவார்.
  • விதை வாங்கும் இடத்தில் வெள்ளை குட்டைக்காய் விதை வேண்டும் என்று கேட்டு வாங்க வேண்டும்.
  • விதை தி.நகரில் பூச்சி மருந்து விற்கப்படும் கடைகளில் கிடைக்கும்.
  • விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு செய்துவிட்டு நிலத்திற்கு மூன்று டிரெய்லர் லோடு மக்கிய தொழு உரத்தை இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலக்க உழுதுகொள்கிறார்.
  • பிறகு ஏக்கரில் 600 குழிகள் போட்டுக்கொள்கிறார். நிலத்திற்கு அடியுரமாக ஒன்று – ஒன்றரை மூடை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்குகிறார்.
  • நிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும் ரசாயன உரமும் உள்ளது.
  • உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் ஊற்றுகிறார்.நிலத்திலுள்ள குழிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடுகிறார்.
  • இவ்வாறு 15 நாட்கள் செய்துவிட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்கிறார்.
  • குழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு ஒன்று – ஒன்றரை மூடை பாரமாபாஸ் 20:20 உரம் இடுகிறார்.
  • குழிகளில் களைச்செடிகளை குச்சிகள் உபயோகித்து அகற்றுகிறார்.
  • செடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். சாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்கிறார்.
  • பிஞ்சு வெள்ளரி பயிரின் மொத்த வயது 90 நாட்கள்.

இந்த சாகுபடியில் பயிரில் விதைத்த 45வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடையில் கீழ்க்கண்டபடி வருமானம் கிட்டுகின்றது.
முதல் தர காய் 80 கிலோ து ரூ.15 = ரூ. 1,200.00
இரண்டாம் தர காய் 100 கிலோ து ரூ.10 = ரூ. 1,000.00
மூன்றாம் தர காய் 100 கிலோ து ரூ.5 = ரூ. 500.00
மொத்தம் ரூ.2,700.00 து 20 அறுவடை = ரூ.54,000.00.
சாகுபடி செலவு= ரூ.27,450.00.
நிகர லாபம் = ரூ.26,550.00
கோடை காலத்தில் குறுகிய நாட்களில் பலன் தரும் பிஞ்சு வெள்ளரி சாகுபடி “சிறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்’ என்று சொல்வது பொருத்தமாகும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *