நெல்லுக்கான பயிர்க் காப்பீடு

நெல் பயிரிடும் விவசாயிகளிடம் பயிர்க் காப்பீட்டுக்கான முழு பிரீமியத்தை வசூலிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பயிர்க் காப்பீடு செய்யும் நெல் விவசாயிகளிடம் முழு பிரீமியம் வாங்க மறுக்கும் கூட்டுறவு வங்கிகள் குறித்த செய்தி 10.12.2010 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியானது.

இந்நிலையில் பயிர்க் காப்பீடு குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் முழு பயனையும் அடைந்திடும் வகையில், கூட்டுறவு வங்கிகள் எவ்வித சுணக்கமுமின்றி செயல்பட வேண்டு
  • பயிர்க் காப்பீடு குறித்து விவசாயிகள் முழுமையாக அறிந்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள், மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் விளம்பரம் செய்துள்ளார்கள்.
  • மேலும், கடன் பெறாத விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திட இம்மாதம் 15-ம் தேதி கடைசி நாள் என்று உள்ளதால், கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து கூட்டுறவு சங்க தனி அலுவலர்கள், களப் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 509 விவசாயிகள், ரூ.415 கோடி அளவுக்கு காப்பீடு செய்துள்ளார்கள்.
  • மேலும், எந்த ஒரு விவசாயியும் கூடுதல் பிரீமியம் செலுத்த விரும்பினால், அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பிரீமியத் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *