பழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பசுமை தொழில் நுட்ப மையம் சார்பில் சூரியஒளி சக்தி உதவியுடன் பழங்கள், மீன், பருப்புகளை உலர்த்தும் கருவி (Solar Air Heater) வடிவமைக்கப்பட்டுள்ளது.

Courtesy:Dinamani
Courtesy:Dinamani

 

 

 

 

 

 

 

 

இது தொடர்பாக பசுமை தொழில் நுட்ப மைய உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ.ஸ்ரீகுமார் கூறியது:

  •  பல்கலைக்கழக மானியக் குழு திட்டத்தின்படி வேளாண்மை மற்றும் தொழில்துறைகளில் சோலார் ஏர் ஹீட்டர் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  •  புதுவையில் மீன்பிடித் தொழில் அதிகளவில் நடக்கிறது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சோலார் ஏர் ஹீட்டர் கருவி மூலம் மீன்களை சுகாதாரமான முறையில் உலர்த்தி ஏற்றுமதி செய்யலாம்.
  •  சூரியஒளி மூலம் உலர்த்துவதால் கிருமிகள், பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. மேலும் பருவநிலை மாற்றத்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
  •  விவசாயிகள் இதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
  • எரிபொருள் சிக்கனம், உலர்த்தும் நேரமும் குறைகிறது.
  • வேளாண் உற்பத்திப் பொருள்களை உலர்த்துவதன் மூலம் குறைந்தது 10 சதவீதம் அளவு லாபத்தைப் பெருக்கலாம்.
  •  சூரியஒளி உலர் கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 20-25 கிலோ பொருள்களை உலர்த்த முடியும். இக்கருவியை விரைவில் வெளிச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார் ஸ்ரீகுமார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி

  1. raghu says:

    Interesting and useful device. Wonder if there are closer up views of the device and its interiors.
    I can see many other uses for this simple device.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *