எலுமிச்சையில் சொறி நோய்

எலுமிச்சை மரங்களை தாக்கும் நோய்களில் முக்கியமானது சொறி நோய். இந்நோய், எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் தென்படுகின்றது. இது பாக்டீரியாவினால் ஏற்படுகிறது


நோயின் அறிகுறிகள்

இலை, கிளை, சிறுகிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும்.

  • குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும்.
  • காய்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளை சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். பழங்களில் தோன்றும்
  • சொறிப் புள்ளிகளில் வெடிப்புகள் தோன்றும். நோயினால் பழங்களின் தோல்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
  • பழங்களில் சாறின் அளவும் குறைகின்றது. சொறி நோயுற்ற பழங்களின் சந்தை மதிப்பும் குறையும்.
  • பழத்திலுள்ள சொறிப்புள்ளிகள் மற்றும் வெடிப்புகள் மற்ற அழுகல் நுண்ணுயிர்கள் உட்புக வழி உண்டாக்குகின்றன.
  • சொறி நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியா, இலைத் துளைகள் மூலமாகவோ அல்லது பூச்சி அல்லது முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ, உட்புகுந்து தாக்குதலை துவங்குகின்றது.
  • நோய் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழைத்துளிகள், காற்று மற்றும் இலை துளைக்கும் பூச்சிகள் மூலம் பரவுகின்றது.

கட்டுப்படுத்தும் வழிகள்

  • நோயுற்றுக் கீழே உதிர்ந்து விழுந்து கிடைக்கும் இலைகளையும், சிறு குச்சி களையும் சேகரித்து எரித்து விட வேண்டும்.
  • மரங்கள் சிறப்பாக வளர நன்கு பரிந்துரைக்கப் பட்ட அளவு உரமிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • பழத் தோட்டங்களில் நோயுற்ற மரங்களிலிருந்து நோயுற்ற சிறு குச்சிகளை வெட்டி தீயிட்டு அழிக்கவும். பின் கவாத்து செய்த உடன் 0.30 சதம் தாமிர ஆக்ஸிகுளோரைடு மருந்து தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து மூன்று முறை ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 100 பி.பி.எம். (100 மில்லி கிராம்/ ஒரு லிட்டர் தண்ணீர்) மற்றும் 0.30 சதம் தாமிர ஆக்ஸிகுளோரைடு கலந்து ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • மரம் துளிர் விடும் ஒவ்வொரு சமயமும், மரத்தின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக நனையும்படி சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீர்)
    தெளித்தல் அவசியம்.
  • இவ்வகை பாக்டீரியா நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீர்) 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • எலுமிச்சையில் தோன்றும் இலைத்துளைப்பான்கள் இந்நோயை பரப்புவதால் அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்துவது அவசியம்.
  • வேப்பம் பிண்ணாக்கு (5 சதவிகிதம்) கரைசலை தெளித்தும் இந்நோயை பரப்பும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.

– முனைவர் ம.குணசேகரன்
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிப்புத்துார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “எலுமிச்சையில் சொறி நோய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *