காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் 3 வகையான கத்திரிக்காய் சாகுபடி செய்து தற்போது அறுவடை நடக்கிறது. விவசாயிகள் நேரில் வந்து சாகுபடி குறித்து அறிந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் கடந்த ஓராண்டு காலமாக வெளிமாநிலத்தில் உள்ள நெல் வகைகள், காய்கனி வகைகள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இதன் விளைச்சல், லாப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படுகிறது.
இதன்படி தை மாதத்துக்கு பிறகு பயிரிட்ட பாலூர் -2 மற்றும் வி.ஆர்.எம்.-1, உஜாலா கோல்ட் ஆகிய ரகங்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
நிலைய வேளாண் வல்லுநர்கள் கூறும்போது –
- இப்புதிய ரகங்கள் 150 நாள் பயிராகும்.
- 65 முதல் 70 நாள்களில் பூத்து காய்க்கும் நிலைக்கு வந்துவிடும்.
- பூச்சிகள் அதிகம் தாக்காதவை.
- பாலூர் -2 ரகம், அதிக காய்ப்புத் தன்மை கொண்டது.
- வி.ஆர்.எம் -1 ரகம், காய்களின் காம்புகளில் சிறிய முள்கள் இருக்கும்.அதிக சுவை மிக்கது.
- உஜாலா கோல்ட் ரகம், நீண்ட வடிவிலும், கொத்துக் கொத்தாக காய்க்கும் தன்மை கொண்டது.
- அடர்த்தியாகவும் அதிக விளைச்சல் தரக்கூடியது.
- நிலையத்தில் இந்த கத்திரிக்காய்களின் விதைகளைப் பெற்று, விவசாயிகள் தங்களது நிலப்பரப்பில் பயிரிட்டு லாபம் பெற வேண்டும்
என்றனர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்