மானாவாரியில் வளரும் தீவன மரங்கள்

மானாவாரி பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் புல் வகைகளில் கொழுக்கட்டைப்புல், நீலக்கொழுக்கட்டைப்புல், மார்வல்புல் மற்றும் ஆஸ்திரேலியாபுல் குறிப்பிடத் தக்கவை.

இவை 3 – 5 அறுவடைகளில் ஒரு எக்டேருக்கு 25 – 40 டன் வரை மகசூல் தரும்.

மானாவாரி பகுதியில் பயறு வகை தீவனப்பயிர்கள் வளர்க்கலாம்.

கால்நடைகளுக்கு புல் எப்படி அவசியமோ அதே போல் பயறு வகை தீவனங்களும் தேவை.

குறிப்பாக குதிரை மசால், வேலி மசால், காராமணி, அவரை, சிராப்ரோ, சென்ரோ மற்றும் கலப்போ முக்கியமானவை.

இவற்றை தனித்தனியே சாகுபடி செய்வதை விட தீவன மரங்கள் வளர்ந்துள்ள பகுதியில் கலந்து (மர ஊடுபயிர் உதவியுடன்) சாகுபடி செய்யலாம்.

சூடாடில் அகத்தி, முருங்கை, ஆச்சா, கிளாரிசிடியா, முள் இல்லா மூங்கில் அரசு, வாகை, துாங்கிமூஞ்சி மரம், வேம்பு, மலை வேம்பு, வெள்வேல், கருவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை இலுப்பை, வேங்கைநாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி முதலியவை நமது பகுதிக்கேற்ற தீவன மரங்கள்.

ஆண்டு முழுவதும் தீவன மரங்களின் இலைகளை கழித்து தழை தீவனத்தில் மர இலைகளை 30 சதவீதம் தரலாம்.

தொடர்புக்கு 9842007125 .

டாக்டர் பா. இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர் தேனி.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *