தென்னையில் ஊடுபயிர் சேனைக்கிழங்கு

  • தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா.
  • ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.
  • ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும்.
  • 7.5×7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும்.
  • முதலில் 30×30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும்.
  • இந்தக் குழியில் 20-25செ.மீ ஆழத்தில் விதைக் கரணைகளை நடவு செய்ய வேண்டும்.
  • நட்ட 2 மாதத்திற்கு பின்பு ஹெக்டேருக்கு 80 கிலோ தழைச்சத்து, 60கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும்.
  • 8வது மாதத்தில் கிழங்குகள் முற்றி ஜனவரி, பிப்ரவரியில் அறுவடைக்கு வரும், ஒரு ஹெக்டேர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கு ஊடுபயிர் செய்வதால் கிடைக்கும் சராசரி மகசூல் 12 டன்னாகும்.
  • நிகர வருமானம் ரூ.24,000. மேலும் சேனைக் கிழங்குகளை நீண்ட நாட்களுக்கு கெடாமல் சேமித்து வைக்க முடியும்.

தகவல்: தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்
நன்றி: M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *