நிலக்கடலை சாகுபடிக்கு 50% மானியத்தில் ஜிப்சம்

“நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது’ என, நாமக்கல் கபிலர்மலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜூ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானிய விலையில், ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது.
  • ஒரு நபருக்கு அதிக பட்சமாக, எட்டு மூட்டை அதாவது, 400 கிலோ ஜிப்சம் வழங்கப்படுகிறது.
  • ஜிப்சம் மானிய விலையில் பெற, நிலத்தின் சிட்டா மற்றும் ரேஷன்கார்டு நகரை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
  • நிலக்கடலையில், திரட்சியான மகசூல் பெற அடியுரமாக, 200 கிலோ ஜிப்சமும், 45வதுந ாளில், 200 கிலோ ஜிப்சமும், 2.50 ஏக்கர் (ஒரு ஹெக்டேர்) பரப்பிற்கு இட வேண்டும்.
  • ஜிப்சம் இடுவதால், எண்ணெய் வித்து கூடுவதுடன், காய்கள் திரட்சியாக பொக்கில்லாமல் கிடைக்கும்.
  • விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் மற்றும் உயிர் உரங்கள் கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிராமணி துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • தேவைப்படும் விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *