நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்

நெற்பயிரில் அறிகுறிகள்

  • நோய்க்காரணியான பாக்டீரியா நெற்பயிரில் வாடல் அல்லது இலைக் கருகலை ஏற்படுத்தும்.  இது பெரும்பாலும் நட்ட 3-4வது வாரங்களில் தோன்றுகிறது.  சிரசக் வாடல் முழுச் செடியையோ அல்லது ஒரு சில இலைகளையோ வாடச் செய்யும்.
  • இலைக்கருகல், இந்நோயின் மற்றொரு முக்கியமான அறிகுறியாகும்.  இவ்வறிகுறி தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.  அவ்வளவாக புலப்படாத மற்றொரு அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமான மாறவது ஆகும்.  இந்த இலைகள் பின்னர் கருகியது போன்று தோன்றும்.
  • இலைக்கருகல் அறிகுறியின் ஆரம்ப நிலையில் இலேசான பச்சை நிறத்தில் நீர்க்கசிவுள்ள அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள் இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றுகிறது.  இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகின்றது.
  • இத்தகைய தாக்கதல் விளிம்பகளின் வழியே பரவி இலையுறைக்கும் பரவுகின்றது.  நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது.  இவற்றிற்கு அருகில் உள்ள இலையின் பச்சை நிறப்பகுதி கிழிந்து காண்ப்படும்.
  • இவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகளில் வெண்மையான கூழ் போன்ற திவலைகள் இலையின்  ஓரங்களில் காணப்படும்.  காய்ந்த பின்னர் விரல்களால் தடவிப் பார்க்கும்போது இவை கரடுமுடரான பகுதிகளாகப் புலப்படும்.  நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி, சோதனைக் குழாயிலுள்ள தெளிவான நீரில் போட்டு பார்க்கும்போது இலையின் சாற்றுக் குழாயிலிருந்து வெண்மை நிறத் திரமாக பாக்டீரியா வெளிவருவதைக் காணலாம்.

 

நாற்று வாடல் – கிரிசெக் இலைகள் நெளிந்து, விளிம்புகளில் மஞ்சள் நிறத்தில் காய்ந்து காணப்படும் இலை நரம்புகளை தவிர இலைகள் சுருண்டு, காய்ந்து காணப்படும்

நோய் பரவும் முறைகள்

முந்தைய எஞ்சிய பகுதிகளில் வித்துக்கள் தங்கியிருக்கும்.  பாசன நீர், மழை மற்றும்
காற்று மூலம் பரவுகிறது.  பறித்த நாற்றின் சேதமடைந்த வேரின் மூலமாக பாக்டீரியாக்கள் நெற்பயிரின் உட்புகுந்து பயிரைத் தாக்குகின்றன.

மேலாண்மை முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறனுடைய இரகங்களான ஐ.ஆர்.36,54,56, பொன்மணி மற்றும் பையூர் 1 ஆகியவற்றைப் பயிரிடலாம்.
  • சூடோமோனாஸ் கொண்டு ஈரவிதை நேர்த்தி செய்யலாம்.  60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சூடோமோனாஸ் தூளை நன்கு கலக்கி 60 கிலோ விதையை இக்கலவையில் 24 மணி நேரம் ஊறவைத்த பின் முளைகட்டி நாற்றங்காலில் விதைக்கலாம்.ள
  • சூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதைநேர்த்தி செய்தல்.  நாற்றுக்களின் வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50-ம் நாளில் இலை வழியாகத் தெளித்தல் (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரிய மூலம் மூன்று, நான்கு முறையாகப் பிரித்து மேலுரமாக இடலாம்.  யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5 : 4 : 1 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் மேலுரமாக இடவேண்டும்.
  • ஐந்து சத வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 10 சத வேப்பம் பிண்ணாக்குச் சாறு அல்லது 10 சத வேலி கருவேல் இலைப்பொழ சாறு அல்லது 20 சத சாணக்கரைசல், இவைகளில் ஏதேனும் ஒன்றை நோய் தோன்றும் தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் இடைவெளியிலும் மறுமுறையும் தெளிக்கலாம்.
  • நோயின் தாக்குதல் தரம் 3 என்ற அளவில் இருக்கும்போது எக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

 

வயலுக்கு வயல் பாசனம் செய்வதை தவிர்க்கவும் பயிர்களுக்கிடையில் சரியான இடைவெளி விடவும்
அக்ரிமைசின் கரைசலில் 8 மணி நேரத்திற்கு விதைகளை ஊற வைக்கவும் வேப்பெண்ணெய் தெளிக்கவும்

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *