நெற்பயிரில் பூச்சிதாக்குதலை கட்டுப்படுத்த வரப்பில் பயறு வகைகள் பயிரிட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கை வேளாண் உதவி இயக்குநர் தனபாலன் விடுத்துள்ள அறிக்கை:
- நெற்பயிரை இலைச்சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான், புகை யான், பச்சை தத்துப்பூச்சி, ஆணைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகள் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின் றன.
- இப்பூச்சி தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த பொறிவண்டு, சிலந்தி, தட்டான், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் உதவுகின்றன. இவைகள் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்கின்றன.
- நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் உள்ள வரப்புகளில் தட்டைப்பயறு, உளுந்து பயிரிடுவதால் இச்செடிகளுக்கு பொறி வண்டுகள் கவர்ந்திழுக்கப்படுகின்றன.
- அவைகள் தீங்கு செய்யும் பூச்சிகளை உண்ப தால், நெற்பயிரில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். இதனால் பூச்சிக்கொல்லிகள் உபயோகத்தை குறைக்கலாம்.
- தட்டைப்பயறு அல்லது உளுந்து விதை களை வரப்பில் 15 செ.மீ இடைவெளிக்கு ஒன்றாக ஊன்ற வேண்டும்.
- இதற்கு தனியாக நீர் பாய்ச்ச தேவை யில்லை. நெற்பயிறுக்கு பாய்ச்சும் நீரே போதுமா னது.
- இந்த பயிர் கள் மூலமும் விவசாயிகள் லாபம் அடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்