வேகமாக பரவுகிறது மாவுப்பூச்சி, வேளாண் துறை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பரவி வரும் மாவு பூச்சி பற்றியும், அதனால், எப்படி கொய்யா தோட்டங்கள் பாதிக்கபடுகின்றன என்றும் பார்த்தோம்.

பப்பாளி செடியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுபடுத்த வழிமுறைகள் பற்றி தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொறுப்பு) இக்னேஷியஸ் ரோச் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

பொங்கலூர், பல்லடம், குடிமங்கலம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில், பப்பாளி பூச்சி என்ற மாவுப்பூச்சி வேகமாக பரவி வருகிறது.

  • நோய் தாக்குதலை துவக்க நிலையில் கண்டு, அழித்து விட வேண்டும்.
  • தோட்டத்தைச் சுற்றி, களை  இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மி.லி., நீம் (வேப்ப) ஆயில் அல்லது வேப்பங்கொட்டை சாறு 50 மி.லி., அல்லது மீன் எண்ணெய் ரெசின்கேன் 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். கட்டுப்படும் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது அவசியம்.
  • அதிகளவில் தாக்குதல் ஏற்படும்போது, பியோரோகுரோன், ட்ரஸ்பான், ரோகார், அசிடேட் உள் ளிட்ட மருந்துகளை இரண்டு மி.லி., அளவு ஒரு லிட் டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • வெர்டிசீலி யம், பிவேரியா பூஞ்சான்மைகளையும் பயன் படுத் தலாம்.

விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல் பட்டு, பயிர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இக்னேஷியஸ் ரோச் கூறினார்.

நன்றி: தினமலர்

மாவுப்பூச்சி பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *