தமிழ்நாட்டில் ஏரிகளிலும் குட்டைகளிலும் அதிகமாக பரவி இருக்கும் தாவரம் ஆகாய தாமரை
இந்த தாவரம் நம் நாட்டு தாவரமே அல்ல. இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாததால் அதிகமாக பரவி வருகிறது
இந்த தாவரம் வந்தால் ஒரு ஏரியை காப்பாற்றுவது மிக கடினம்.
இந்த தாவரத்தை பற்றியும் இதனால் ஏற்படும் தீங்குகளை பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம்
இது வரை ஆகாய தாமரையை கட்டுபடுத்த வேதியியல் முறை தான் பயன் படுத்த பட்டது .2, 4-D, glyphosate மற்றும் paraquat போன்ற களை கொல்லிகள் பயன் படுத்த பட்டன
ஆனால் நீரில் இவை கலப்பதால் நீர் மாசு படுகிறது.மீன்கள் சாகின்றன.
எப்படி இந்த ராட்சசனை ஒழிப்பது என்று திண்டாடிய நிலையில் ஒரு நல்ல நியூஸ்.
அதுவும் நம் ஊரில் எளிதாக கிடைக்கும் ஒரு தாவரத்தை வைத்து ஆகாய தாமரையை முழுவதும் ஒழிக்க அண்ணாமலை பல்கலை கழக நிபுணர்கள் கண்டு பிடித்து உள்ளனர்
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி என்று எளிதாக வளரும் தாவரத்தை பார்த்து இருப்பீர்கள்
இதன் இலையை காய வைத்து ஒரு லிட்டருக்கு 20 கிராம் நீரில் கலந்து ஆகாய தாமரையின் மீது தெளித்தால் அவை மடிந்து விடுகின்றன
மேலும் தகவல் அறிய
Dr கதிரேசன், அண்ணாமலை பல்கலை கழகம்
email: rm.kathiresan@sify.com, மொபைல்: 09655188233
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Looks interesting, most lakes in Bangalore are completely taken over by this weed.. Hope the authorities try this..
Good news indeed!
Very accessible solution for a major menace. I wonder if the suggested solution can actually eradicate completely or the weed will resurface periodically with immunity to this in the long run. I believe the ideal solution will be a cohabiting plant or organism that controls the growth of the weed.
Are there any equivalent recipes for parthenium weed?
thank you sir