ரகங்கள்: பிகேஎம்1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்
மண் மற்றும் தட்பவெப்பநிலை:
- மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
- வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
- சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ. வரை போதுமானது.
- மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.
- பருவம்: ஜூன் – டிசம்பர்
- இனப்பெருக்கம்: விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல
நடவு:
- 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும்.
- குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளில் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
- ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவ வேண்டும்.
- செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றி கட்டிவிட வேண்டும்.
நீர்ப்பாசனம்:
- கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை:
- நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில்தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
- பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
மகசூல்:
- ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.
- இதன் அடிப்படையில் தரிசு நிலத்தில் புளி சாகுபடி ஒரு லாபகரமான தொழிலாகும்.
தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர்,
அக்ரி கிளினிக்,268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் போஸ்ட், தாராபுரம்-638 657. அலைபேசி எண்:093607 48542.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
என்னுடைய புளியமரம் நன்றாக பூக்கிறது ஆனால் காய்ப்பது இல்லை என்ன செய்யலாம் ?
தேன் கூடுகளை பயன்படுத்தி பாருங்கள்
புளியமரம் வளர்க்க உகந்த
மண் வகை எது?