நெற்பயிரில் குருத்து பூச்சி

வருமுன் காக்கும் வழிகள்

  • நாற்றங்காலில் பூச்சி நிர்வாகம் செய்வது அவசியம்.
  • நாற்றங்காலுக்கு அருகில் உள்ள மின் விளக்குகளை இரவு 7-11 மணிவரை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.
  •  நாற்றங்காலுக்கு ப்யூரடான் குறுணை மருந்தினை ஒரு சென்ட் பரப்பளவிற்கு 120 கிராம் என்றளவில் மணலுடன்  கலந்து நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன் சீராக இட வேண்டும்.
  • நாற்றங்கால் தயார் செய்து விதைப்பதற்கு முன் வேப்பம் பிண்ணாக்கு 1 சென்டுக்கு 600 கிராம் என்றளவில் இட  வேண்டும்.

வந்த பின் கட்டுபடுத்தும் வழிகள்

  •  நடவு வயலில் குருத்துப் பூச்சி உண்டாக்கும் சேதத்தைக் கண்டறிந்து பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • வந்த பின் தடுக்கும் வழிகள் ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டைக் குவியல்கள் மற்றும் அந்திப்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும்பொழுது டிரைக்கோகிராம்மா ஜப்பானிக்கம் என்ற ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் 7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை விட வேண்டும்.
  • குருத்து காய்தல் 5 விழுக்காடாக இருக்குமானால் வேப்பம் பருப்பு சாறு 5 விழுக்காடு தெளிக்க வேண்டும்.
  • குருத்து காய்தல் 10 விழுக்காடாக இருக்குமானால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லிகளான குயினைல்பாஸ் 400மிலி (அ) மேனோகுரோட்டோபாஸ் 400மிலி /ஏக்கர் ஏதாவது ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  • இதனுடன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், நீர் நிர்வாகம் போன்ற சாகுபடி முறைகளையும் கையாள வேண்டும்.

தகவல்: வேளாண்மை அலுவலர், உழவர் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *