குழித்தட்டு முறையில் மரவள்ளி கிழங்கு சாகுபடி

தரமான செடிகளை நட, குழிதட்டு மரவள்ளி கிழங்கு நாற்றுகளை விவசாயிகள் நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களில் மரவள்ளி கிழங்கும் ஒன்று. மாவட்டத்தில் மானாவரியாகவும், இறவை சாகுபடியிலும், 18 ஆயிரத்து, 978 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை நடவு செய்ய அடிக்குச்சியில் இருந்து நடு குச்சி வரை வெட்டி நடவு செய்து வந்தனர். இதனால் செடிகள் வைரஸ் நோய் மற்றும் வேர் அறுந்து பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததுடன், வைரஸ் நோயை கட்டுப்படுத்த செலவு செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் விவசாயிகள் கடந்த, இரண்டு ஆண்டுகளாக பசுமை குடில்களில் குழித்தட்டு நாற்றங்கால்களில் வளர்க்கப்படும் மாரவள்ளி கிழங்கு நாற்றுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் செடிகள் வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்படுவதுடன், வேர் உறுதியாக உள்ளதால் மகசூல் அதிகளவில் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையை அடுத்து விவசாயிகள் குழி தட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மரவள்ளி கிழங்கு நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

குழித்தட்டு நாற்றுக்கள் தரமானதாகவும், உரிய வளர்ச்சியுடன் கிடைப்பதால், விவசாயிகளுக்கு மகசூல் அதிகளவில் கிடைக்கிறது. தர்மபுரி மாவட்டம் முழுவதும், 100க்கும் மேற்பட்டோர் பசுமை குடில்களில், குழித்தட்டு முறையில் மரவள்ளி கிழங்கு நாற்றுக்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. பசுமை குடில் அமைத்து நாற்றங்கால் தயாரிக்கவும், பசுமை குடில்களின் கீழ் விவசாய பணிகள் மேற்கொள்ள செய்யப்படும் மொத்த மதிப்பில், 50 சதவீதத்தை தோட்டக்கலைத்துறை சார்பாக, அரசு மானியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *