மிளகாயில் பூச்சி கட்டுப்பாடு

  • நாற்றங்காலில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என்று கவனியுங்கள்.
  • இலைப்பேன் தாக்குதலுக்கு உள்ளான மிளகாய் இலைகள் சிறுத்து மேடு பள்ளங்களுடன் காணப்படும். அப்படிப்பட்ட இலைகளின் பின்புறத்தினை உற்றுநோக்கினால் வைக்கோல் நிற மெல்லிய பேன் போன்ற பூச்சிகள் விரைந்து நகர்வதைக் காணலாம்.
  • நாற்று பிடுங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக டைமீதோயேட் 0.03 சத கரைசலைக் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து நட்ட வயலில் இலைப்பேன் தாக்குதல் தொடர்வதைக் கட்டுப் படுத்தலாம்.
  • ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி டைமீதோயேட் மருந்து வீதம் கலந்தால் 0.03 சத கரைசல் கிடைக்கும். மாலை நேரத்தில் தெளிப்பது நல்ல பலன் தரும்.
  • மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு அரை மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.
  • மேலும் மிளகாய் பயிரில் இலைப்பேன் தாக்குதலைக் குறைக்க, சிபாரிசுப்படி மக்கிய தொழு உரம் அல்லதுநன்கு மக்கிய தாவரக் கழிவுகளை இடவேண்டும்.
  • வைரஸ் நோய் பரப்பும் இலைப்பேன் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் பரவுதலைத் தடுக்க வயலினைச் சுற்றிலும் நாட்டுச் சோளம் நெருக்கமாக ஒரு அடி அகலத்திற்கு விதைத்து (தடுப்பு சுவர் போல) வளர்க்க வேண்டும்.
  • வயலினைச் சுற்றிலும் ஆங்காங்கே ஆமணக்கு வளர்க்க வேண்டும். இதன் மூலம் புரொடீனியா காய்ப் புழுவின் அந்துகள் கவரப்படும்.இதனால் புரொடீனியாப் புழுவின் முட்டைக்குவியல்கள் மற்றும் இளம் புழுக் கூட்டங்களை எளிதில் அழிக்க இயலும்.
  • மிளகாய்ப்பயிரில் மானோகுரோட்டோபாஸ் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை முறனைச்சிலந்தி மற்றும் வெள்ளைஅசுவிணித் தாக்குதலை அதிகப்படுத்தும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *