மதுரை மாவட்டம் மேலுார் அருகே வேப்படப்பை சேர்ந்தவர் வாழை விவசாயி ஜெகதீஸ்வரன். மேலுார் தோட்டக்கலைத் துறை மூலம் திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ‘ஜி.9.’ ரக வாழையை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.
தோட்டக்கலை உதவி அலுவலர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
- வீரியமிக்க ‘ஜி.9’ ரகத்தைச் சேர்ந்த வாழை மரத்தில் இருந்து திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வாழை கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கிறோம். நோய் தாக்குதல் இருக்காது.
- வீரியமிக்க வாழை என்பதால் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு.
- வாழை மரத்தின் துார் பகுதி கனமாக இருப்பதால் மழை, காற்று போன்ற இயற்கை இடர்பாடு பாதிப்புகளில் அதிக பாதிப்பு வராமல் பாதுகாக்கலாம்.
- தோட்டக்கலை வழங்கும் அட்டவணைப்படி இயற்கை உரத்தை திசு ழைக்கு பயன்படுத்தினால் பிற வாழை விவசாயத்தை விட 3 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்றார்.
விவசாயி ஜெகதீஸ்வரன் கூறியதாவது:
- ஒரே நேரத்தில் வாழை தார்களை அறுவடை செய்ய முடிகிறது.
- பூவன், ஒட்டு போன்ற பிற ரகங்களை சேர்ந்த வாழைகளில் வாழைத்தாரில் உள்ள காய்களின் எண்ணிக்கையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் திசு வாழையில் எடை கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
- ஏக்கருக்கு 33 டன் மகசூல் கிடைக்கிறது.
- ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. லாபம் ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்றார்.
தொடர்புக்கு 09751018008 .
– எஸ்.பி.சரவணக்குமார் மேலுார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Business of banana leaf
Business
I’m interested banana leafe
.
I’m interested banana leafe