சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்

சிக்கிம் மாநிலம் 2014 வருடத்தில் எல்லா விவசாயமும் அங்கக முறை இயற்கை விவசாயம் ஆக மாறிவிடும் என்று அந்த மாநில அரசு அறிவித்து  உள்ளது.
2003 வருடம் சிறிய அளவில் ஆரம்பித்த இந்த முயற்சி மாநிலம் முழுவதும் எல்லா விவசாயமும் 2014 வருடத்தில் இயற்கை முறை விவசாயம் முறைக்கு மற்ற படும்

2007 வருடத்திற்கு பிறகு, மத்திய அரசு அளிக்கும் ரசாயன உர அளவை சிக்கிம்  முற்றிலும் நிறுத்தி கொண்டு விட்டது(fertilizer quota) .

இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் இருந்த ரசாயன உர கடைகள் மூட பட்டு விட்டன.

சிக்கிம் அரசும் இயற்கை விவசாயம் முன்னேற எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 24,536 கம்போஸ்ட் குழிகளும் 14,487 மண்புழு வேர்மிகோம்போஸ்ட் குழிகளும் அமைத்து கொடுத்து உள்ளது.

அங்கக முறையில் விளைவிக்க பட்ட காய்கறிகளும், பழங்களும் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் பலன் பெற்று வருகிறார்கள்.

ஒரு மாநிலம் முழுவதும் இப்படி மாறுவது என்பது நல்லது தானே!

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *