தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கான உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் வருகிற 2015 ஜன.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதுகுறித்து பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் என்.தமிழ்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைச் சட்டம் விவசாயிகளிடம் சென்றடையவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபெறும் முகாமில் விவசாயிகளின் சொந்த முயற்சியில் உருவான ரகங்களை விவாதித்து, காப்புரிமை பெறுவதற்காக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும், காலங் காலமாக சாகுபடி செய்யப்படும் பயிர் ரகங்களின் விதைகள், பயிர்களை முகாமில் வைத்து மற்ற விவசாயிகள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் வருகிற 2015 ஜன.27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 04342245860 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்