பாரம்பரிய நெல் முன்னோடி விவசாயி ஜெயராமன் மறைந்தார்

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி நெல் ஜெயராமன் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

நெல் ஜெயராமன்

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பத்ததில் முக்கிய பங்காற்றி வந்தவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன்.

நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சி பெற்ற ஜெயராமன் அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கி வந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார்.

நெல் ஜெயராமன்

அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் அவரின் பணியை அடுத்த தலைமுறை விவசாயிகள் மேற்கொண்டு எடுத்து செல்வோம்!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *