பார்தேனியம் செடி விவசாயத்திற்கு மிக பெரும் பிரச்னையாக வளர்ந்து உள்ளது. இந்த களை செடியை பற்றி நாம் ஏற்கனவே படித்து உள்ளோம்
விவசாயம் மற்றும் இல்லாமல், மக்களுக்கும் இந்த செடியால் ஆஸ்த்மா, தோல் விதிகள், ஒவ்வாமை போன்ற கோளாறுகள் வருகின்றன. இந்த களை செடியை கட்டுபடுத்துவது எப்படி?
- செடிகள் பூப்பதற்கு முன்பு கையில் கையுறை அணிந்து வேரோடு பிடுங்கி எரித்து விடவேண்டும்
- இவை அதிகம் வளரும் இடங்களில் வேறு சில பயிர்களாக அடர் ஆவாரை, ஆவாரை, துத்தி மற்றும் நாய்வேளை போன்ற செடிகளை பயிரலாம். இவற்றால் கட்டுப்படும்
- செவந்தியை பயிர் சுழற்சி முறையில் பயிர் இடலாம்
- ஒரு லிட்டர் நீரில் 200 கிராம் உப்பு மற்றும் 2 ml டீபால் ஒட்டு திரவத்தை சேர்த்து நல்ல வெயில் நேரத்தில் செடிகள் நனையும்படி கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்
நன்றி: தினத்தந்தி, 26/01/2012
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்