2018 டிசம்பர் 21, 22 மற்றும் 23-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள மின்னல் எம் மஹhலில் விவசாய கண்காட்சி 2018 என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற உள்ளது.
கண்காட்சி நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை
கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் – முற்றிலும் இலவசம்.
முகவரி :
மின்னல் எம் மஹhல்,
பாலக்காடு ரோடு,
பொள்ளாச்சி,
கோயம்புத்தூர் மாவட்டம் – 642001.
விவசாய அரங்கிற்கு முன்பதிவு செய்ய : 9787287392 .
கண்காட்சியின் சிறப்பம்சங்கள் :
- இந்த கண்காட்சியில் பண்ணைக்கருவிகள், இயற்கை இடுபொருட்கள், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், சோலார் பம்ப் செட், ஒருங்கிணைந்த பண்ணையம், சொட்டுநீர்ப் பாசனம், விதைகள், வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் கருவிகள், பால் பண்ணை அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் முறை போன்றவை இடம் பெற உள்ளது.
- இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாடு குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கமளிக்கப்படுகிறது.
- கால்நடை வளர்ப்பில் உள்ள தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள், பால் பண்ணை அமைக்கும் முறைக்கான விவசாய அரங்குகள் மற்றும் முன்னோடி கால்நடை வளர்ப்பவர்கள் ஆலோசனைகள் இடம் பெற உள்ளன.
- அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் விவசாய வல்லுனர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் இந்த கண்காட்சியில் புதிய நவீன விவசாய கருவிகள், புதிய விவசாய கண்டுப்பிடிப்புகளுக்கு விவசாய அரங்கு அமைத்து தருவதாக கூறியுள்ளனர்.
- இந்த கண்காட்சியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விவசாய அரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த கண்காட்சியில் ஸ்டால் புக்கிங்கிற்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த கண்காட்சியில் உங்கள் விவசாயம் சார்ந்த பொருட்களை கொண்டு ஸ்டால் அமைத்து மற்ற விவசாயிகளுக்கு, உங்களை பற்றிய தகவல்களை தெரியப்படுத்தலாம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்