ஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு

ஸ்ரீலங்கா அரசு இயற்கை  வேளாண்மை ஆதரவு அளிக்கும் என்று ஸ்ரீலங்கா வேளாண்மை அமைச்சர் மகிந்த யப்பா அபயவர்த்தனா கூறினார்.

இயற்கை வேளாண்மையால், விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு குறைகிறது, அதனால், அவர்கள் கையில் லாபம் அதிகம் ஆகிறது என்றார் அவர்.
இந்தியாவிற்கு வந்து ஸ்ரீலங்கா விவசாயிகள், ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பலேகர் அவர்களிடம் பயிற்சி எடுத்து சென்றார்கள் என்று பசுமை விகடனில் ஏற்கனவே படித்து உள்ளோம்.

இப்படியாக, ஒரு அரசாங்கமே இயற்கை விவசாயத்தை செய்வது முதல் தடவையாகும்..

இந்தியாவில், கேரளமும், இமாச்சல பிரதேசமும் இப்படி ஒரு முடிவை எடுத்து உள்ளன. நம் தமிழ் நாடு புதிய முதல் மந்திரி இதை கவனிப்பாரா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *