புதிய தக்காளி பயிர்

புதிய ரக தக்காளி – வீரிய ஒட்டு3

இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது.
  • இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது.
  • வயது – 145-150 நாட்கள்.
  • பருவம் – பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர்.
  • பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை.
  • சிறப்பியல்புகள்: அடர்நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் கொத்தாகவும், (கொத்திற்கு 3-5 பழங்கள்), 55.65 கிராம் எடையுடனும், உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களில் 5.58 பிரிக்ஸ் மொத்த கரையும் திடப்பொருளும், 0.73 சதம் புளிப்புச்சுவையும், 35.72 மி.கி/100 கி வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளது.
  • இலைச்சுருள், நச்சுயிரி நோய், வேர்முடிச்சு நூற்புழுவுக்கு மித எதிர்ப்புத்திறன் கொண்டது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “புதிய தக்காளி பயிர்

Leave a Reply to manickavasagam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *