நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முக்கூடல் வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

  • பாப்பாக்குடி வட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் குருத்துப்பூச்சி தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
  • இந்த வருடம் குருத்துப்பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
  • குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெற்பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டைகளிடும்.
  • இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இதில் இருந்து வெளிவரும் இளம் மஞ்சள் நிற புழுக்கள் நெற்பயிரின் தூர்களை தாக்கி சேதம் ஏற்படுத்தும்.
  • அப்போது பயிர் குருத்து வாடிவிடும். அந்த குருத்தினை கைகளால் உருவினால் எளிதாக வந்து விடும்.
  • குருத்தின் அடியில் பூச்சியினால் ஏற்பட்ட சேதமும் கதிரின் தண்டினை துண்டித்திருப்பதும் தெரியும்.
  • இந்த அறிகுறி தெரிந்தால் விவசாயிகள் உடனடியாக புரொப்பனோபாஸ் 50 சதம், இன்டோசோகார்ப் 14.50 சதம், கார்டாப் ஹெட்ரோகுளோரைடு 50 சதம் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • திரவங்களான சாண்டோவிட், பைட்டோவிட், லிங்காவிட் ஆகியவற்றில் ஒன்றினை ஏக்கருக்கு 100 மி.லி வீதம் கலந்து சீராக தெளித்து குருத்துப்பூச்சியினை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தடுக்கலாம்.
  • மேலும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான இனக்கவர்ச்சி பொறிகளை நெல் நடவு செய்த உடன் ஒரு ஏக்கரில் 4 எண்ணம் வீதம் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நெற்பயிரில் குருத்துப்பூச்சி கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  1. வெங்கடேசன். கோ says:

    எனது உரவிற்பனை தொழிலுக்கு பேருதவியாக இருக்கும். நன்றி

Leave a Reply to வெங்கடேசன். கோ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *