டீசல் சிக்கனமும் பம்ப்செட் தேர்வும்

சந்தையில் கிடைக்கும் பல்வேறு பம்ப்செட்களுக்கு தண்ணீரை பம்ப் செய்வதற்கு வெவ்வேறு அளவுகளில் டீசல் தேவைப்படுகிறது. எனவே, ஐ.எஸ்.ஐ., முத்திரை மற்றும் நட்சத்திரம் லேபிள் செய்த பம்ப்பை தேர்வு செய்வது முக்கியம். அது மட்டும் போதாது. விவசாயிகள் தங்களின் கிணற்றுக்கும், தண்ணீர் தேவைக்கும் ஏற்ப பம்ப்பை தேர்வு செய்ய வேண்டும். பக்கத்து தோட்டத்தில் பயன்படுத்தும் பம்ப் நல்லதாக இருந்தால், அது தங்களுக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

Courtesy: Dinamalar

ஐ.எஸ்.ஐ., முத்திரை

பம்ப்பை சரியான வேகத்தில் இயங்கச் செய்வதற்கு சரியான இன்ஜினையும் தேர்வு செய்ய வேண்டும்.

இதற்கு ஒரு நிபுணரிடம் கலந்து ஆலோசனை
செய்தல் நலன் பயக்கும். பம்ப்பை இயக்குவதற்கு போதிய குதிரை சக்தி (எச்.பி.) திறன் உள்ள இன்ஜினை தேர்வு செய்ய வேண்டும்.

இன்ஜினுக்குத் தேவைப்படும் சக்தியின் அளவை ஒரு நிபுணர் கணக்கிட முடியும். எப்போதுமே, பிரபலமாகவும் நல்ல தரமானதாகவும் உள்ள இன்ஜினை தேர்வு செய்வது நல்லதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இன்ஜினில் ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

திறன் மிக்க இன்ஜின்
இன்ஜினில் மிக அதிக புகை வரக்கூடாது. தயாரிப்பாளர் பரிந்துரை செய்த சரியான கிரேடு மசகு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

இன்ஜினை ஆயில் பில்ட்டருடன் சேர்த்து பொருத்த வேண்டும். இன்ஜினில் காற்று பில்ட்டர் இருக்க வேண்டும். அதை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும்.

சரியான புட்-வால்வு பயன்படுத்துவதன் மூலம் 10 சதவிகிதம் டீசல் மிச்சம்.

விரைப்பான பி.வி.சி., கொண்டு தயாரிக்கப்பட்ட பைப்கள், ‘கால்வனைஸ்’ செய்த இரும்பு பைப்களுடன் ஒப்பிடும்போது குறைவான உராய்வை ஏற்படுத்துகின்றன.

இதனால் எரிபொருள் சேமிப்புக்கு உதவும். ஒவ்வொரு பைப்லைன் வளைவும் 80 மி.மீ., விட்டம் கொண்டதாக இருக்க வேண்டும்.

டீசல் சிக்கன முறை

பைப்லைன் நீளம் 3 மீட்டர் கூடுதலாக இருப்பதற்கு ஏற்ப உராய்வு இழப்பை பைப்லைன் ஏற்படுத்துகிறது. பைப்பில் ஷார்ப் வளைவுகள் மற்றும் ‘எல்’ வடிவ இணைப்புகள் இருந்தால், சாதாரண வளைவுகளை காட்டிலும் 70 சதவிகிதம் அதிக உராய்வு இழப்பை ஏற்படுத்தும்.

நீர் மட்டத்தில் இருந்து 10 அடிக்கும் மிகாத உயரத்தில் பம்ப் அதிக செயல்திறனுடன் இயங்கும். கிணறு ஆழமாக இருந்தால், சரியான உயரத்தில் மேடை அமைத்து பம்ப்பை பொருத்த வேண்டும்.

பைப் உயரத்தை 2 மீட்டர் குறைப்பதன் மூலம் விவசாயி ஒவ்வொரு மாதமும் 15 லிட்டர் டீசலை சேமிக்கலாம் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *