குறுவை நெல் பயிருக்கு உரமிடுவது குறித்து வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன் விளக்கமளித்துள்ளார்.
- திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 38,870 ஹெக்டேரில் குறுவை நெல் பயிரிடப்ப்டடு, தற்போது பயிர் தூர்கட்டும் பருவத்தில் மேலுரம் இடும் தருவாயில் உள்ளது.
- மேலும், இதுவரையில் 3,353 ஹெக்டேரில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.
- குறுவைப் பருவத்துக்கு மேலுரம் இடும் போது முதல் மேலுரம் நடவு செய்த 15-ம் நாள் 28 கிலோ யூரியா இட வேண்டும்.
- 2-வது மேலுரம் பஞ்சு கட்டும் தருணத்தில் 28 கிலோ யூரியாவுடன் 17 கிலோ பொட்டாஷ் சேர்த்து இடலாம்.
- மூன்றாவதாக நடவு செய்த 45-ம் நாள் 28 கிலோ யூரியா இட பரிந்துரை செய்யப்படுகிறது.
- பொட்டாஷ் உரம் மேலுரமாக இட முடியாத சூழ்நிலையில் கீழ்காணும் முறையில் பொட்டாஷ் சத்தை பயிருக்கு அளிக்கலாம்.
- மண்ணில் உள்ள பொட்டாஷ் உரத்தை கரைத்து பயிருக்கு அளிக்கும் பாக்டீரியாவை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
- இந்த பாக்டீரியாவை யூரியா போன்ற ரசாயன உரங்களுடன் கலந்து இடக் கூடாது.
- மல்டி கே என்ற உரத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்,
மேற்காணும் முறைகளைப் பின்பற்றி பயிருக்கு சாம்பல் சத்தை அளிக்கலாம் என மயில்வாகணன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்